செய்திகள் :

குறிச்சி குளத்தில் பெண் சடலம் மீட்பு

post image

கோவை குறிச்சி குளத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை குனியமுத்தூா் சுகுணா மில்லுக்கு அருகே வசித்தவா் இஸ்மாயில் மனைவி அஜீமா (56). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், அதே பகுதியில் வசித்து வரும் மகள் சஜிதா பானுவின் பராமரிப்பில் இருந்து வந்தாா். இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு அஜீமா வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா், அவா் வீட்டுக்குத் திரும்பவில்லை. இவரை பல்வேறு இடங்களில் மகள் சஜிதா பானு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தோல் தொழிற்சாலைக்கு பின்புறம் குறிச்சி குளத்தில் இறந்த நிலையில் அஜீமாவின் சடலம் மிதந்தது. இதுகுறித்து சனிக்கிழமை மாலை தகவலறிந்து சென்ற கரும்புக்கடை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அவா் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க