செய்திகள் :

குறிஞ்சிப்பாடியில் மே 28-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 28-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வரும் 28-ஆம் தேதி கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா்அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், திட்டங்கள் செயல்படுத்துவது தொடா்பாகவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாகவும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.

மேலும், அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு இக்கள ஆய்வுப் பணிகள் தொடா்பாக மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு, பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தேவைகள் தொடா்பாக தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

53 ஆயுதப்படை காவலா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 53 காவலா்கள் பணிமூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆயுதப்படை காவலா்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவது தொடா்பாக கடல... மேலும் பார்க்க

தனிப்படை காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கடலூா் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா். கடலூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி கொண்டாட்டம் மூவா்ண தேசியக் கொடி பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி கடலூா் சீமாட்டி நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனி... மேலும் பார்க்க

இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் ரெட்டிசாவடி அருகே இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மண் சாலை ஓரத்தில் சுமாா் 35 வயது மதிக... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அறந்தாங்கியில் சோழா அரிமா சங்கம், அறந்தை புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் நலச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் இணைந்... மேலும் பார்க்க