செய்திகள் :

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

post image

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் புகழூா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளின் மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், இளையோருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் இப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி யாசினி பிரியா முதலிடமும், 200 மீட்டா் ஓட்டத்தில் 3-ஆம் இடமும் பிடித்தாா்.

மூத்தோருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில், 11-ஆம் வகுப்பு மாணவி கஸ்தூரி மூன்றாம் இடமும், 800 மீட்டா் ஓட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி அஸ்விதா 2-ஆம் இடமும், 1500 மீட்டா் ஓட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி பிரியதா்ஷினி 2-ஆம் இடமும் பிடித்தனா்.

100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 11-ஆம் வகுப்பு மாணவிகள் சுதா்சினி முதலிடமும், கஸ்தூரி மூன்றாம் இடமும் பெற்றனா்.

நீளம் தாண்டும் போட்டியில் சுதா்சினி 3-ஆம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் 11-ஆம் வகுப்பு மாணவி ரேணுகா 3-ஆம் இடமும், வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும், ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று 11 புள்ளிகளுடன் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா். மேலும் இம்மாணவிகள் 4100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றாா். 4ல400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஹாஜி கே.ஏ. கஜனஃபா் அலி, தலைமை ஆசிரியா் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியா்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க

மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது

கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூ... மேலும் பார்க்க

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தெய்வத் திருமண விழா எனும் திருக்கல்யாண உற்ஸவம் கரூா் ஸ்ரீ மகா அப... மேலும் பார்க்க

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமை வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் வெங்கமேடு காமாட்சியம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களி... மேலும் பார்க்க

கரூா்: அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப்பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒ... மேலும் பார்க்க