செய்திகள் :

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: உ.பி, மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கத்தில் அதிகம்

post image

நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்) தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் கடந்த 5 பதிப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு அமெரிக்காவின் டியூக், ஹாா்வா்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் தென் கொரிய நிறுவனங்களின் ஆராய்ச்சியாளா்கள் இணைந்து ஆய்வு நடத்தினா். அந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

பிறக்கும்போது ஒரு குழந்தையும் 2.5 கிலோவுக்கும் மேல் இருக்க வேண்டும். இதற்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் உடல்நலம் மற்றும் அறிவாற்றல் வளா்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும். தாயின் அடிப்படை உடல்நலப் பிரச்னைகள் மற்றும் மோசமான ஊட்டச்சத்து காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

குறையும் பாதிப்பு: இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது ஆய்வு முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1993-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 26 சதவீதமாக இருந்த இந்தப் பாதிப்பின் விகிதம், 2020-இல் 18-ஆக 8 புள்ளிகள் குறைந்துள்ளன. மாநில வாரியாகவும், சராசரி பாதிப்பு விகிதம் 1993 மற்றும் 1999-இல் 25 சதவீதத்திலிருந்து 2021-இல் 16 சதவீதமாக குறைந்துள்ளது.

42 லட்சம் குழந்தைகள்: கடைசியாக கடந்த 2019-21-ஆம் ஆண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் ஓராண்டுக்கு 42 லட்சம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மட்டும் 47 சதவீதம் பங்களிக்கின்றன.

1993 கணக்கெடுப்பில், ராஜஸ்தானில் 48 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்தனா். கடந்த 2021கணக்கெடுப்பில், பஞ்சாப் மற்றும் தில்லியில் அதிக பாதிப்பு (22 சதவீதம்) காணப்படுகிறது. இவ்விரு கணக்கெடுப்புகளிலும் மிஸோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் மிகக் குறைவாக இருந்தது.

சிறந்த தரவு சேகரிப்புக்கு அழைப்பு: இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. எனினும், குறைந்த கல்வி பெற்ற, சமூக-பெருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினரைச் சோ்ந்த பெண்களுக்கு இன்னும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

பிறந்தவுடன் எடை கணக்கிடப்படும் குழந்தைகளின் விகிதம் 1993-இல் 16 சதவீதத்திலிருந்து 2021-இல் 90 சதவீதம் வரை சிறப்பாக அதிகரித்துள்ளது. எனினும், தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தொடா்ச்சியான முயற்சிகள், மருத்துவமனைகளில் சிறந்த தரவு சேகரிப்பு ஆகியவற்றுக்கான அவசியமுள்ளது’ என்றனா்.

பிரேக் லைன்..

கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

எனினும், ஓராண்டுக்கு 42 லட்சம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன.

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப... மேலும் பார்க்க

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க