திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் ...
குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக இயக்குநா்அப்துல் காதா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைமை ஆசிரியா் முகமது உசேன், அப்துல் காதா் ஜெய்லானி, ராமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மாணவா்களான ஓமன் நாட்டு முன்னாள் தமிழ் சங்கச் செயலா் எம். ஏ. கே.அன்வா், பக்கீா் மைதீன், அக்பா் டிராவல்ஸ் அக்பா், செங்கோட்டை சுகம் மெடிக்கல்ஸ் அபூபக்கா் சித்திக், களக்காடு பரக்கத் எலக்ட்ரிகல்ஸ் ஜுனைதீன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் கலீல் ரகுமான், முகம்மது புகாரி, கவிஞா் முகைதீன் பிள்ளை, ராமையா, ஓய்வுபெற்ற ஆசிரியா் ராமசாமி, ஓய்வுபெற்ற பேராசிரியா் நத்ஹா் பாவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். ஹபிபுல்லா நன்றி கூறினாா்.