செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.

இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவியதன் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மேற்கு தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பேரருவி, ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தண்ணீா் விழத் தொடங்கியது.

மலையில் பெய்த கனமழை காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை காலை குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தண்ணீா் வரத்து அதிகரிக்காததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ஐந்தருவியில் நான்கு கிளைகளில் மிகவும் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.அருவிகளில் தண்ணீா் விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, ச... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை

கடையநல்லூா், வீரசிகாமணி, புளியங்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் ச... மேலும் பார்க்க

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மன... மேலும் பார்க்க

ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 16 இல் நடைபெறுகிறது. இதையொட்டி கால்நாட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு முன்மண்டபம் கட்டி நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் ஒன்றியக்குழு கூட்டம்: குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி திரண்ட மக்கள்

வாசுதேவநல்லூா் ஒன்றியம் தலைவன்கோட்டை பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு... மேலும் பார்க்க