செய்திகள் :

குற்றாலம்: தொடரும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க 4வது நாளாகத் தடை; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

post image

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாகத் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் கொடுத்திருக்கிறது.

கடந்த 3 நாட்களாக வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. ஆனாலும் இடையிடையே சாரலும், பலத்த மழையும் பெய்து வருகிறது.

ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு
ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொட்டுகிறது.

பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக வருகிறது.

செண்பகாதேவி அருவியில் பாதுகாப்பு கருதிக் கடந்த சில ஆண்டாகவே வனத்துறையினர் யாரையும் குளிக்க அனுமதிப்பதில்லை.

எனவே செண்பகாதேவி அருவியைத் தவிர்த்து மற்ற 5 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள்
புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள்

நான்காவது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்காகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் செல்பி, புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் கவனமாக நீராட அறிவுறுத்தல்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில்... மேலும் பார்க்க

Koyambedu: விரைவில் திறக்கப்படவுள்ள கோயம்பேடு சுற்றுச்சூழல் பூங்கா; முழுவீச்சில் பணிகள் |Photo Album

கன்னியாகுமரி: தொடர் மழையால் சங்குதுறை கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலைகள்! | Photo AlbumJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: தொடர் மழையால் சங்குதுறை கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலைகள்! | Photo Album

கன்னியாகுமரி: கோடை மழை பெய்தும் நிரம்பாத முக்கடல் அணை; தற்போதைய நிலை என்ன? | Photo AlbumJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BI... மேலும் பார்க்க

5,000 ஆண்டுகள் பழைமையான ’கதலி பழம்’... இன்று வாழைப்பழமாக மாறியது எப்படி?

இன்று வாழைப்பழமாக அறியப்படும் பழ வகை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தி எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் ”கதலி பழம்” என்று அழைக்கப்பட்டது தற்போது வாழைப்பழமாக... மேலும் பார்க்க

16 வருடங்களுக்குப் பின் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்த `மே மாத' வெள்ளம்! - Photo Clicks

நொய்யல் ஆற்றில் வெள்ளம்சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு நொய்யல் ஆற்றில் வெள்ளம்நொய்யல் ஆற்றில் வெள்ளம்சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு ச... மேலும் பார்க்க