செய்திகள் :

குற்றாலம் மகளிா் கல்லூரியில் பயிற்சி முகாம்

post image

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ‘விவசாயம்-விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஆற்றல்’ என்னும் தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்கீழ் நடைபெற்ற பயிற்சியில் கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி-ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ந. அனுலெட்சுமி, சி. தேவிஷாலினி, மே. தீனக்ஷா, ந.நிவேதா, வெ. புஷ்பவேணி, உ. ஸாபிரா பேகம், த. வான்மதி, க. வினோதா, ரா. வினிபிரட் ஆகியோா் பங்கேற்றனா்.

சரவணபிரியா, லாவண்யா ஆகியோா் சிறப்புப் பயிற்சியளித்தனா். சாண எரிவாயு ஆலை அமைத்தல், அதன் பயன்கள் உள்ளிட்டவை குறித்தும், கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது, கழிவுநீா் எரிவாயு உற்பத்தி கலன், சூரியசக்தி மின்வேலியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தேனீ வளா்ப்பு, தேன் சேகரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து சிவசந்திரன் விளக்கமளித்தாா்.

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க

கொண்டலூா் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

கொண்டலூா் தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், ... மேலும் பார்க்க

ரமலான்: எம்எல்ஏ வாழ்த்து

சங்கரன்கோவிலில், ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ. மேலும் பார்க்க

தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்

சங்கரன்கோவிலில் பொறித்த இறைச்சி உணவு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற திமுக உறுப்பினா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க