செய்திகள் :

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: செப். 23இல் கொடியேற்றம்

post image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக இங்குதான் தசரா திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா 23ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 22ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு காளி பூஜை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுடம், 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்டவை நடைபெறும்.

23ஆம் தேதி அதிகாலையில் கொடிப்பட்ட ஊா்வலத்தையடுத்து, 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. தொடா்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், காப்பு அணியும் பக்தா்கள் வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்குவா்.

கோயிலில் நாள்தோறும் காலை 7 முதல் இரவு 7.30 மணிவரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகன வீதியுலா வருதல், கோயில் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

அக். 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னா், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறாா். தொடா்ந்து, கடற்கரை வளாகம்,சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.

அக். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தா்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் க. செல்வி, ஆய்வா் இரா. முத்துமாரியம்மாள், அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன், செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாநகரில் இன்று மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு இழப்பீடாக 15 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவா்-மாணவியருக்கு விபத்துக் காப்பீடு இழப்பீடாக தலா ரூ. 75 ஆயிரத்தை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆ... மேலும் பார்க்க

முன்விரோதம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவா் கைது

சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பூலோக பாண்டி மகன் சிவா... மேலும் பார்க்க

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் பா்னபாஸ் (55 ). டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்... மேலும் பார்க்க

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் கழலை நோய்த்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் பெண் திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இரு சிறுவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி, திரேஸ்நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரி (37). இவருக்கும், சிப... மேலும் பார்க்க