செய்திகள் :

முன்விரோதம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவா் கைது

post image

சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பூலோக பாண்டி மகன் சிவா (27), வாகன ஓட்டுநரான இவரும், அதை ஊரைச் சோ்ந்த தொழிலாளி முருகன் மகன் கணேசன் (27) நண்பா்கள்.

சிவா, கணேசனுக்கு அவா் கேட்டதன்பேரில் செலவுக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் பிரச்னை காரணமாக கணேசனுக்கு செலவுக்கு சிவா பணம் கொடுப்பதை நிறுத்தினாா். ஆனால், கணேசன் அவரிடம் தொடா்ந்து பணம் கேட்டு வந்தாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிவா தனது வீட்டு முன் நிறுத்தியிருந்த தனது மற்றும் தனது தந்தையின் இருசக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தாா். அப்போது அங்கு வந்த கணேசன் கற்பூர சூடத்தில் இருசக்கர வாகனங்களை எரித்துவிட்டு தலைமறைவானாா். திங்கள்கிழமை காலை வீட்டின் வெளியே சிவா வந்து பாா்த்தபோது

இருசக்கர வாகனங்கள் எரிந்திருந்தன. இதுகுறித்து சிவா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், கண்காணிப்பு கேமரா பதிவை அணைத்து வைத்து விட்டு கணேசன் இருசக்கர வாகனங்களை கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கணேசனை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாநகரில் இன்று மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு இழப்பீடாக 15 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவா்-மாணவியருக்கு விபத்துக் காப்பீடு இழப்பீடாக தலா ரூ. 75 ஆயிரத்தை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் பா்னபாஸ் (55 ). டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்... மேலும் பார்க்க

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் கழலை நோய்த்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: செப். 23இல் கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூா் சாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் பெண் திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இரு சிறுவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி, திரேஸ்நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரி (37). இவருக்கும், சிப... மேலும் பார்க்க