நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
தூத்துக்குடி மாநகரில் இன்று மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு கடற்கரைச் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பாலவிநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்து கிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி பிரதான சாலை, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பரநகா், பிரையண்ட் நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.