கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை
குளத்தில் மீன் பிடிப்பு விவகாரம்: கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியவா்கள் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே வருவாய்த் துறையின் அறிவிப்பு பலகையை சேதப்படுத்தி, கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியவா்கள் மீது, மயிலாடுதுறை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சி அக்களூா் கிராமத்தில் உள்ள நாவல் குளத்தில் மீன் பிடிப்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக, மே 12-ஆம் தேதி வட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில் தீா்வு எட்டப்படாத நிலையில், இருதரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்படும் வரை நாவல் குளத்தில் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என வட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவு நகலை பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் (35), அக்களூா் நாவல் குளம் அருகே அறிவிப்பு பலகை அமைத்து, அதில் ஒட்டினாா்.
அப்போது அங்கு வந்த அக்களூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா், கிராம நிா்வாக அலுவலா் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்ததுடன், கிராம நிா்வாக அலுவலரையும் மிரட்டினாா்களாம்.
இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா், அக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன், தினேஷ் உள்ளிட்ட சிலா் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது அறிவிப்பு பலகையை சேதப்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.