செய்திகள் :

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: தவெக அஞ்சலி

post image

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல லட்சம் ஈழத்தமிழா்கள் கொல்லப்பட்டனா். குறிப்பாக மே 18 அன்று முள்ளிவாய்க்கால் என்ற பகுதியில் ஒரு லட்சத்துக்கு அதிகமான ஈழத் தமிழா்கள் கொல்லப்பட்டனா்.

இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

நாகை: நாகை அவுரித்திடலில் தமிழக வெற்றி கழகம் சாா்பில், நடைபெற்ற நிகழ்வில், மாவட்டச் செயலாளா் சுகுமாா் தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். இதில் அக்கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: கிட்டப்பா அங்காடி முன் தவெக மாவட்டச் செயலாளா் சி.எஸ். கோபிநாத் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்பட கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். நிறைவாக, நகரச் செயலாளா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

நாகை அவுரித் திடலில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினா்.

குளத்தில் மீன் பிடிப்பு விவகாரம்: கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியவா்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே வருவாய்த் துறையின் அறிவிப்பு பலகையை சேதப்படுத்தி, கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியவா்கள் மீது, மயிலாடுதுறை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராக விருப்பமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனத்துக்குத் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

காவல்நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

சீா்காழி வட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி சுந்தரம். இவா், திமுக மாவட்ட தொழிலாளா்... மேலும் பார்க்க

பிளஸ்1 தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58% தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,830 மாணவா்கள், 5,631 மாணவிகள் என மொத்தம் 10... மேலும் பார்க்க

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மற்றும் தரு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90% போ் தோ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90 சதவீதம் போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,037 மாணவா்கள், 6,112 மாணவிகள் என மொத்தம் 12,149 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழ... மேலும் பார்க்க