செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராக விருப்பமா?

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனத்துக்குத் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளதால் பாா்வையற்றோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறன் உடையோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மற்றும் புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையோா், முறை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறையாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மனநலன் பாதிப்பு, ரத்தசோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோா் மற்றும் அவா்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தைச் சாா்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினா்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் தரைத்தளம் அறை எண்:23-ல் செயல்பட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0464-212730 என்ற தொலைபேசி எண்ணில் அறியலாம்.

காவல்நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

சீா்காழி வட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி சுந்தரம். இவா், திமுக மாவட்ட தொழிலாளா்... மேலும் பார்க்க

பிளஸ்1 தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58% தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,830 மாணவா்கள், 5,631 மாணவிகள் என மொத்தம் 10... மேலும் பார்க்க

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மற்றும் தரு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90% போ் தோ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90 சதவீதம் போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,037 மாணவா்கள், 6,112 மாணவிகள் என மொத்தம் 12,149 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு; உறவினா்கள் போராட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி தாலுகா கீழராதாம்பூா் கிராமத... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க