செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

post image

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள்.

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

கெட் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பலியானவர்கள் மிதாலி விவேக் மோர் (43), மேகா பரத்கர் (22), சௌரப் பரத்கர் (22), நிஹார் மோர் (19) மற்றும் ஷ்ரேயாஸ் சாவந்த் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கெட் அருகே அதிகாலை 5.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

கார் முதலில் சாலையின் தடுப்பில் மோதி ஜக்புடி ஆற்றின் வறண்ட ஆற்றுப் படுகைக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் வறண்டு இருந்ததால், கார் பாறைகளில் மோதியதில் அதில் இருந்த சிலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்தவர்கள் ரத்னகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பால்கர் மாவட்டத்தில் உள்ள நல்லசோபராவிலிருந்து தேவ்ருக் நகரை நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகளின் தந்தையான சௌத்ரி முகமது அக்ரம் பலியானது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டது தவறல்ல, குற்றம்: ராகுல் காந்தி!

இந்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டது தவறு அல்ல, குற்றம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பதிவிட்டுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பொற்கோயிலை பாதுகாத்தது எப்படி? ராணுவம் விளக்கம்

கடந்த மே 8 ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோயிலை பாதுகாத்தது குறித்து இந்திய ராணுவம் திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளது.முன்பே கணித்து தாக்குதலை எதிர்கொள்ள... மேலும் பார்க்க

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க