செய்திகள் :

குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!

post image

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குளிரூட்டிகளின் விலையும், மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொத்த மக்கள்தொகையைப் பொறுத்தவரை, குளிரூட்டிகளின் அதிகப்படியான தேவையில் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிரேசில், பிலிப்பின்ஸ், அமெரிக்கா இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய ஆய்வு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் குளிரூட்டிகளின் தேவை அதிகரிக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இந்திய எரிசக்தி மற்றும் காலநிலை மையம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.

இதையும் படிக்க:வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!

ஆய்வில் தெரிவித்ததாவது, இந்தியாவில் 2035 ஆம் ஆண்டில் வீட்டுப் பயன்பாட்டு குளிரூட்டிகளின் தேவை 130 மில்லியன் முதல் 150 மில்லியன்வரையில் அதிகரிக்கக் கூடும்.

இதன் மூலம், நாட்டின் உச்சபட்ச மின்தேவையும் 2020 ஆம் ஆண்டில் 120 ஜிகாவாட்டும், 2035-ல் 180 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக அதிகரிக்கக் கூடும். இது கிட்டத்தட்ட 30 சதவிகித அதிகரிப்பாகும்.

இந்த வளர்ச்சி, மின் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கலாம். இந்தியாவில், தற்போது வெப்ப அலை அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதால், மின் தேவையும் 10 சதவிகிதம்வரையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், குளிரூட்டிகளின் தேவை அதிகரிப்பதால், எரிசக்தி செயல்திறனை இரட்டிப்பாக்குவதன் மூலம் நுகர்வோருக்கு ரூ. 2.2 லட்சம் கோடிவரையில் பலன் கிடைக்கலாம்.

ஔரங்கசீப் கல்லறை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: ‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது’ என்று மகாராஷ்டிர... மேலும் பார்க்க

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அமித் ஷா

ஹிசாா்: ‘நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். ஹரியாணா மாநிலம், ஹிசாரில் மகார... மேலும் பார்க்க

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?

19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம... மேலும் பார்க்க

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க