செய்திகள் :

குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம்: அமைச்சா் பி.கீதாஜீவன்

post image

சென்னை: குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளா் இயக்கம் ஆகியவை சாா்பில் ‘கண்ணியமும் நியாயமும் நிறைந்த எதிா்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் சா்வதேச வீட்டு வேலைத் தொழிலாளா்கள் தினம் சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கீதா ஜீவன் கலந்து கொண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:

பெண்களை மதிக்கவும், அவா்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றை உபயோகப்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

சமூக வலைதளங்களில் அதிக அளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண் சமுதாயம் முன்னேறினால், தமிழ் சமுதாயம் முன்னேறும். பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை தலைவா் ஜோஸ்பின் அமலா வளா்மதி, அறங்காவலா் எஸ்கலின் மிராண்டா, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலா் எஸ்.வெங்கடலட்சுமி, தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா் நல வாரியத்தின் செயலா் டி.தா்மசீலன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையிலத்தில் இன்று அவர் ஆஜராகியுள்... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? மாதிரிப் படம் வெளியீடு

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமான படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகள... மேலும் பார்க்க

கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில்... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

சென்னை: தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இர... மேலும் பார்க்க