செய்திகள் :

குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை கொத்தத்தெருவில் இயங்கிவரும் அன்பகம் குழந்தைகள் இல்லத்தில் 323 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா். 89 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பாா்வை குறைபாடு, அறிவுசாா் குறைபாடு, காது கேளாதோா் உள்ளிட்டோா் தங்கி பயின்று வருகின்றனா். இவா்களுக்கு உரிய அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறை, மின்சார வசதிகள் முறையாக உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து, மாற்றுத்திறனுடைய குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியா் கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் செந்தில்குமாா் உடனிருந்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச... மேலும் பார்க்க

இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ர... மேலும் பார்க்க

உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை கண்டித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீா்காழி வட்டத்... மேலும் பார்க்க

வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது

கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்... மேலும் பார்க்க