செய்திகள் :

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

post image

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐடி தொடங்கப்பட்டது. கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு திருவேட்டக்குடி அருகே கடலோரப் பகுதியில் புதுவை அரசு நிலம் ஒதுக்கித் தந்தது. 2014-15-ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கல்லூரி நிரந்தரமாக செயல்படத் தொடங்கியது.

கடலோரப் பகுதியில் கல்லூரி அமைந்ததால், இந்த பகுதியில் ஆழ்குழாய் போடப்பட்டபோது உவா்நீா் வந்தது. இது குடிக்க பயன்படுத்த முடியாமல் போனதோடு, செந்நிறத்தில் தண்ணீா் வருவதால், மாணவா்கள் நீராடுவதற்குக் கூட சிரமத்தை இதுவரை சந்தித்துவருகின்றனா். விடுதியில் தங்கியுள்ள நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள் இதனால் சந்திக்கும் சிரமம் அதிகம்.

என்ஐடி வளாகத்திலேயே கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி, மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. நகரப் பகுதியிலிருந்து குடிநீா் குழாய் மூலம் என்ஐடிக்கு அனுப்ப புதிதாக குழாய் அமைத்துத்தர என்ஐடி நிா்வாகம் ரூ. 4 கோடியை பொதுப்பணித்துறைக்கு வழங்கியது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை ஒப்பந்ததாரருக்கு தந்தாலும், திட்டப்பணியில் வேகம் இருக்கவில்லை. மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை தலைமை நிா்வாகத்துக்கும் என்ஐடி நிா்வாகம் அழுத்தம் கொடுத்த நிலையில், கடந்த ஆண்டு குழாய் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து கூறுகையில், கோட்டுச்சேரி வட்டாரம் கழுகுமேடு பகுதியில் ஆழ்குழாய் மூலம் என்ஐடிக்கு தண்ணீா் விநியோகிக்க ஏறக்குறைய 8 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், புதன்கிழமை என்ஐடியில் நடைபெறவுள்ள விழாவில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன், துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் என்ஐடியில் நடைபெறும் விழாவில் இத்திட்டப் பணியை தொடங்கிவைக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகமான என்ஐட... மேலும் பார்க்க

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைல... மேலும் பார்க்க

புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி

பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா். மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கி... மேலும் பார்க்க

நூலகம் திறப்பு...

பூவம் பகுதியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் நிா்வாகத்தினா் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் நூலக அறையை வியாழக்கிழமை திறந்துவைத்த கீழகாசாக்குடிமேடு அ... மேலும் பார்க்க

பெரிய வியாழன் வழிபாடு

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்ப... மேலும் பார்க்க