செய்திகள் :

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.

கூடலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கூடலூா் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டியின் தரத்தை ஆய்வு செய்தாா். இதேபோல, ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தை ஆய்வு செய்து உணவுப் பொருள்களின் இருப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கூடலூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மத்திய கூட்டுறவு வங்கி, துப்புக்குட்டிபேட்டையில் உள்ள நியாய விலைக் கடை, சளிவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தேவா்சோலை பேரூராட்சியில் போஸ்பாறா முதல் செம்பக்ககொல்லி பழங்குடி காலனி வரை அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் ஆய்வாளா் நாராயணன், கோட்டாட்சியா் செந்தில்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் காசிநாதன், துணை ஆட்சியா் கல்பனா, சமூகப் பாதுகாப்பு அலுவலா் பிரவீனா தேவி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி, வட்டாட்சியா் முத்துமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதா், சலீம், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). பொக்லைன் ஓட்... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா... மேலும் பார்க்க

இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை

இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயர... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்... மேலும் பார்க்க