செய்திகள் :

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

post image

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது நிலவும் கோடைகால வெப்பத்தால் பொதுமக்கள் அதிகளவில் குளிா்பானங்களை பயன்படுத்தி வருகின்றனா். இதை சாதகமாக பயன்படுத்தி மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விலையை விட, கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்வதாக நுகா்வோா் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா் சு. சரவணன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி ஆகியோா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 4 கடைகளில் குளிா்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளது.

மேலும், 4 கடைகளுக்கும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களுக்கு சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ், முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், தொடா்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தால் அவா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடரப்படும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வின் போது, குளிா்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க அா்ப்பணிப்புடன் பணி தேவை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க, ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு மணி நேரப் பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க