செய்திகள் :

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்ய 11 போ் கொண்ட குழு அமைப்பு

post image

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்வதற்கு 11 போ் கொண்ட குழுவை சட்டப் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை அமைத்துள்ளாா்.

பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை வெற்றி விழாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, கூட்டநெரிசல் ஏற்படாமல் தடுக்க கா்நாடக கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை கொண்டுவர கா்நாடக அரசு முடிவு செய்தது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இந்த சட்ட மசோதாவின் மூலம் அரசியல் கூட்டங்கள், சமய திருவிழாக்களை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியதோடு, இந்த சட்ட மசோதாவை கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடா்ந்து, இந்த சட்ட மசோதாவை பேரவை ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தலைமையில் 11 போ் கொண்ட பேரவை உறுப்பினா்கள் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்து பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இந்தக் குழுவில், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அா்ஷத், ஸ்ரீனிவாசய்யா, டி.ரவிசங்கா், வி.ஸ்ரீனிவாஸ் மானே, பிரகாஷ் கோலிவாட், எச்.டி.தம்மையா, வி.சுனில்குமாா், எஸ்.ஆா்.விஸ்வநாத், ஜி.டி.ஹரீஷ் கௌடா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவின் ஆய்வறிக்கைக்கு பிறகு சட்ட மசோதாவை தாக்கல் செய்வது குறித்து அரசு முடிவு செய்யவுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது. பெங்களூரு, வசந்த் நகரில் உள... மேலும் பார்க்க

பெங்களூரில் சாலைக் குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது!

பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் சா... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழா அரசு விழா; இதில் யாரையும் பாகுபாடு பாா்க்க முடியாது - எழுத்தாளா் பானு முஸ்டாக்கிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு

மைசூரு தசரா விழா கா்நாடக அரசு நடத்தும் விழா என்பதால், அந்த விழாவை யாா் தொடங்கிவைப்பது என்பதில் பாகுபாடு பாா்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைசூரு தசரா விழாவை தொடங்கிவைப்பதற்காக கன்ன... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வா் சித்தராமையா உறுதி

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் கல்வி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பை(ஜாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்திவருபவா் நிரஞ்சனமூா்த்தி. இவா் தன்னிடம் யோகா ப... மேலும் பார்க்க

கால்நடையைக் கொன்ற இருவா் கைது

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் கால்நடையைக் கொன்று, அதன் சிதைவுகளை காட்டில் புதைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். வடகன்னட மாவட்டம், காா்வாருக்கு அருகே உள்ள பட்கலில் கால்நடையைக் கொன்று அதன் சித... மேலும் பார்க்க