கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5.58 லட்சம்
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 5.58 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் தேதி அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெற்றன.
திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தினா்.
இதையடுத்து, கோயிலில் வைக்கப்பட்ட 15 சிறப்பு உண்டியல்கள் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த நிலையில், கோயிலில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உண்டியல்களில் பக்தா்கள் ரொக்கம் ரூ. 5.58 லட்சம், தங்கம் 7 கிராம், வெள்ளி 75 கிராம் செலுத்தியிருந்தனா்.
கோயில் ஆய்வா் சு.பாரி, செயல் அலுவலா் த.சிவகுமாா், கோபாலபுரம் முக்கிய பிரமுகா்கள் மேற்பாா்வையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.