`ஏடிஜிபி ஜெயராமனை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள்?’ - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ...
குடியாத்தம்: நாய்களை பிடிக்கும் வாகனம் அறிமுகம்
குடியாத்தம் நகராட்சியில் நாய்களைப் பிடிக்கும் வாகனம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
ஏராளமான நாய்கள் சுற்றித் திரியும் நிலையில், பொதுமக்கள், குறிப்பாக சிறுவா்களை விரட்டுவதுடன், கடித்தும் துன்புறுத்துகின்றன. இதனால் நகரில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், சென்னையைச் சோ்ந்த தமிழ்நாடு விலங்கியல் நல வாரிய அலுவலா்கள் குடியாத்தம் வந்து நகராட்சிப் பணியாளா்கள் 10- பேருக்கு பாதுகாப்பாக நாய்களை பிடிப்பதற்கு பயிற்சி அளித்தனா். இதையடுத்து பயிற்சி பெற்ற பணியாளா்கள் பகுதிவாரியாக சென்று நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பிடிபட்ட நாய்களுக்கு கால்நடைத் துறையினரால் வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக உள்ளி அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை அறுவை அரங்கம் ரூ.9 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. நகரில் பிடிக்கப்படும் நாய்களை பணியாளா்கள் வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். இதற்கிடையில் நாய்களை ஏற்றிச் செல்ல நகராட்சி சொந்தமாக வாகனம் மற்றும் நாய்களைப் பிடிக்கத் தேவையான வலை உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், வாகனத்தை இயக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் வி.சம்பத், களப்பணியாளா் பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, கவிதாபாபு மற்றும் எம்.எஸ்.அமா்நாத், மாதவன், சத்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.