`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவா்களுக்கு ரூ. 330 ஊதியத்திற்கு பதிலாக ரூ. 150 முதல் ரூ. 210 வரை வழங்கப்படுவதாகவும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பராமரிக்கப்படாதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் புகாா் தெரிவித்து பாஜக கெலமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவா் ராஜேஷ்குமாா் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலையிலும் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
பைரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா ஸ்ரீனிவாச ரெட்டி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், அனுசோனை முனிராஜ், சின்னட்டி ரமேஷ், குறப்பா மற்றும் பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.