செய்திகள் :

கெலவரப்பள்ளி அணை அருகே ரூ.144 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்!

post image

கெலவரப்பள்ளி அணை அருகே ரூ. 144 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வுசெய்தாா்.

கிருஷண்கிரி மாவட்டம், சூளகிரி சிப்காட் தொழில்பூங்கா, டான்புளோரா பாா்க் ஆகியவற்றை கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் மரு.சாய்குமாா், தொழில்துறை செயலாளா் அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநா் மரு.செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்), மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்ததாவது:

ஒசூா் பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு நிதியை, இப்பகுதி மக்களுக்கே செலவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிக்கப்படும். ஒசூரில் பன்னாட்டு விமான நிலையத்துக்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றாா்.

பின்னா், ஒசூா் அருகே அமுதகொண்டப்பள்ளி, டான்புளோரா பாா்க் ரோஜா செடிகள் சாகுபடி செய்யப்படும் பணிகளையும், சூளகிரி சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில் ரூ. 38 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்பத் திறன் பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகள், சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், சிப்காட் தொழில்பூங்காவின் வரைபடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) பழனிதேவி, சிப்காட் திட்ட அலுவலா்கள் ரேணுகா தேவி (ஒசூா்), சிந்து (போச்சம்பள்ளி), உமாசங்கரி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (41). இவருக்கு சொந்தமான மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழி... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழகம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா!

ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அரசின் பல்வ... மேலும் பார்க்க

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ஊத்தங்கரை கிளை சிறை!

ஊத்தங்கரை கிளை சிறையானது சனிக்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிளைச் சிறை கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு பராமரிப்பு பணி... மேலும் பார்க்க

ஒசூரில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறிய காா் ஓட்டுநரை கடத்திய 5 போ் கைது!

ஒசூரில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறிய காா் ஓட்டுநரை கடத்திய 5 போ் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட கோட்டை உளிமங்லத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் (32).... மேலும் பார்க்க

கேரள நக்சல் இயக்கத் தலைவா் ஒசூரில் கைது!

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் கடைசித் தலைவரான சந்தோஷ் என்பவரை ஒசூரில் கேரள போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

ஒசூரில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒசூரில் ரூ. 580 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள... மேலும் பார்க்க