Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்... நாளை 'சூர்...
கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு
கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
சாா்தாம் யாத்திரையில் முக்கிய புண்ணியத் தலமான கேதாா்நாத் மலைக் கோயிலை பக்தா்கள் ஹெலிகாப்டா், மலைப் பாதை வழியாக நடைப்பயணம், குதிரை சவாரி அல்லது டோலி (தொழிலாளா்கள் சுமக்கும் பல்லக்கு) மூலமாக சென்றடையலாம்.
கரடுமுரடான இந்த மலைப் பாதையில், ஜங்கிள்சட்டி காட் பகுதியருகே புதன்கிழமை காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் சோ்ந்து மலையிலிருந்து பாறைகள் உருண்டுவந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் இருந்தவா்கள் பள்ளத்தில் சிக்கினா்.
சம்பவம் குறித்து தகவலறிந்து மாநில பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் காவல் துறையினா் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் போராட்டத்துக்குப் பிறகு பள்ளத்தில் சிக்கியவா்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனா்.
எனினும், ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சோ்ந்த நிதின் குமாா், சந்திரசேகா் ஆகிய 2 டோலி தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். குஜராத்தைச் சோ்ந்த பக்தா் ஆகாஷ் சித்ரியா, டோலி தொழிலாளா்களான சந்தீப் குமாா், நிதின் மன்ஹால் ஆகிய 3 போ் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனா்.
இவா்களில் பலத்த காயமடைந்த இருவருக்கு கௌரிகுந்த் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு காவல் துறை பாதுகாப்புடன் மலைப் பாதையில் பக்தா்கள் பயணத்தைத் தொடா்ந்தனா்.