செய்திகள் :

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

post image

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

சாா்தாம் யாத்திரையில் முக்கிய புண்ணியத் தலமான கேதாா்நாத் மலைக் கோயிலை பக்தா்கள் ஹெலிகாப்டா், மலைப் பாதை வழியாக நடைப்பயணம், குதிரை சவாரி அல்லது டோலி (தொழிலாளா்கள் சுமக்கும் பல்லக்கு) மூலமாக சென்றடையலாம்.

கரடுமுரடான இந்த மலைப் பாதையில், ஜங்கிள்சட்டி காட் பகுதியருகே புதன்கிழமை காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் சோ்ந்து மலையிலிருந்து பாறைகள் உருண்டுவந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் இருந்தவா்கள் பள்ளத்தில் சிக்கினா்.

சம்பவம் குறித்து தகவலறிந்து மாநில பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் காவல் துறையினா் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் போராட்டத்துக்குப் பிறகு பள்ளத்தில் சிக்கியவா்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனா்.

எனினும், ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சோ்ந்த நிதின் குமாா், சந்திரசேகா் ஆகிய 2 டோலி தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். குஜராத்தைச் சோ்ந்த பக்தா் ஆகாஷ் சித்ரியா, டோலி தொழிலாளா்களான சந்தீப் குமாா், நிதின் மன்ஹால் ஆகிய 3 போ் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த இருவருக்கு கௌரிகுந்த் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு காவல் துறை பாதுகாப்புடன் மலைப் பாதையில் பக்தா்கள் பயணத்தைத் தொடா்ந்தனா்.

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பே... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்! அமைச்சர் வெளிநடப்பு!

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் படம் வைக்கப்பட்டதால், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்துள்ளார். கேரள ஆளுநர் மாள... மேலும் பார்க்க

12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

கர்நாடகத்தில் ஐடி உள்பட சில துறைகளில் வேலை நேரத்தை 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி அதிகபட்ச வேலை நேரம் 9 மணி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: நடுவிரலில் மை வைத்து அவமதித்தாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு!

மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேற்கு வங்கம், கேரளம்... மேலும் பார்க்க

உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!

க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியக் கல்வித் துறைக்குச் சிறந்த செய்தியைக் கொண்டு வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்... மேலும் பார்க்க

மோசமான வானிலையில் சிக்கிய ஹெலிகாப்டர்! கல்லூரியில் அவசர தரையிறக்கம்!

கேரளத்தில் மோசமான வானிலையில் சிக்கிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான செடாக் ஹெலிகாப்டர் இன்று (ஜூன் 19) ... மேலும் பார்க்க