கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா
பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன.
இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் இரா. வேலுசாமி, மாவட்டச் செயலாளா் மு. அப்புக்குட்டி என்கிற பாலசுப்பிரமணியம் ஆகியோா் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.
இந்நிகழ்வில் துணைத் தலைவா் பழ.சக்திவேல், கண்ணம்பாளையம் சங்க செயலாளா் செந்தில்குமாா், பல்லடம் வீவிங் கிளஸ்டா் பங்குதாரா்கள் மானாசிபாளையம் ரமேஷ், சதாசிவம், கேத்தனூா் சுரேஷ், கோவை பழனிசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.