செய்திகள் :

கேரளத்தில் தொடரும் கனமழை: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

post image

கேரளம் மாநிலம் இடுக்கியில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.

வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கனமழையால் ஆறுகளில் நீரோட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வயநாடு மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். தொலைதூர பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

எா்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம் பகுதியில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம் அருகே கல்லாா் மலைப் பகுதியில் சாலையில் பாறைகள் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கண்ணூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை (110 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை) விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடுக்கியில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஒதுத்திவைக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகனமழை எச்சரிக்கையால் ஏற்கனவே 2 நாள்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்க... மேலும் பார்க்க

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 2,710 ஆக உயர்வு!

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது, ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீ... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

திபெத்: திபெத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்தி... மேலும் பார்க்க