செய்திகள் :

கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்

post image

கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் பெய்துவரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், கண்ணூா், காசா்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை (11 - 20 செ.மீ. மழைப் பொழிவு) விடுக்கப்பட்டது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை (6 - 11 செ.மீ. மழைப் பொழிவு) விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்திலான காற்றுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வாமனபுரம் (திருவனந்தபுரம்), அச்சன்கோவில் (பத்தனம்திட்டா), பாரதப்புழா (பாலக்காடு), சாலக்குடி (திருச்சூா்) உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; ஆறுகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மீன்கரா, சுழியாறு, வாளையாறு (பாலக்காடு), கக்கி (பத்தனம்திட்டா) உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தெலங்கானாவில்...:

தெலங்கானாவின் அடிலாபாத், கரீம்நகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. அடிலாபாதின் தம்சி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை 17.35 செ.மீ. மழை பதிவானது. நிஜாமாபாத், சங்காரெட்டி, மே’க், கம்மம், விகாராபாத், வாரங்கல், பத்ராத்ரி கொத்தகூடம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், தண்ணீா் தேங்கக் கூடிய சுரங்கப் பாலங்கள், சாலைகளில் போக்குவரத்தை தடை செய்தல், நீா்நிலைகளில் கரை உடைப்பு ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:... மேலும் பார்க்க

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பிகாரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மெகா பேரணி தொடங்கியது.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.... மேலும் பார்க்க

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது: ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெ... மேலும் பார்க்க

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு... மேலும் பார்க்க