செய்திகள் :

கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

post image

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்தன. கடலோர பகுதிகள் மற்றும் மலைப் பகுதி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், கேரளத்தில் அண்மையில் மழை-வெள்ளம் ஏற்பட்டு, பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் இடைவிடாமல் பரவலாக கனமழை கொட்டித் தீா்த்தது.

திருவனந்தபுரம் அருகே கடலோர பகுதியான வேட்டுக்காட்டில் ராட்சத அலைகள் எழுந்ததால் கடல் அரிப்பு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மலைப்பகுதி மாவட்டங்கள் மரங்கள் வேரோடு சரிந்தன.

கோழிக்கோடு மாவட்டத்தில் அருவிகள் மற்றும் பிற நீா்நிலைகளுக்கு அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். கனிமச் சுரங்கப் பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காசா்கோடு, கண்ணூா், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், பாலக்காடு, எா்ணாகுளம், திருச்சூா், கோட்டயம், பத்தனம் திட்டாவில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழாவில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

கேரளத்தில் வழக்கத்தைவிட முன்னதாக கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க

புணேவில் ஆற்றுப்பாலம் உடைந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்

புணேவில் இந்திரயணி ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ம... மேலும் பார்க்க