செய்திகள் :

கேரளா: மகாத்மா காந்தியின் பேரனுக்கு எதிராக RSS தொண்டர்கள் ஆர்பாட்டம்! - காரணம் என்ன?

post image

'இந்திய தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது' என தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் துஷர் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது, ``தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சங்-பரிவார் மேலும் பரப்புகிறது" எனப் பேசினார். இந்தக் கருத்தை எதிர்த்து மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்திக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துஷர் காந்தி

அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. துஷர் காந்தி தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். தன் கருத்தை பின்வாங்க மறுத்து, அதில் உறுதியாக இருந்த துஷர் காந்தி, ``காந்தி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் ஒழிக" என முழங்கினார். தொடர்ந்து விடாமல் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி துஷர் காந்தியின் காரை மறித்தனர்.

தன் கருத்தில் பிடிவாதமாக இருந்த துஷர் காந்தி, கோஷம் எழுப்பிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால், அந்தப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர் கே.சுதாகரன், பா.ஜ.க, ஆர்,எஸ்.எஸ்-சை கடுமையாக விமர்சித்திருந்தார். ``இந்தக் கூட்டம் (நாதுராம்) கோட்சேவின் பேயால் வேட்டையாடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த சி.பி.எம்-ன் மௌனம் சந்தேகத்தை எழுப்புகிறது" என்றார்.

`தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன’ - திருமாவளவன்

நெல்லை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "திமுக ஆட்சியை அகற்ற யாருடனும் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூ... மேலும் பார்க்க

TN Budget: தனிநபர் வருமானம் டு மாநில ஜிஎஸ்டிபி - பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 14) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 – 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச... மேலும் பார்க்க

கழுகார் : `ஆலையைத் திறக்க வேறொரு ரூட் ’ டு `குழப்பத்தில் பெண் தெய்வப் பிரமுகர்’

அம்பலமாகும் கூட்டுச் சதி!மரக் கொள்ளைக்காக ஆப் ஆனதா சி.சி.டி.வி?‘ஜில்’ மாவட்ட நுழைவு வாயிலின் மலைச்சரிவில், யானைகளின் முக்கிய வழித்தடம் மற்றும் வாழ்விடம் அமைந்திருக்கிறது. அதிலுள்ள மரங்களை, ‘முதிர்ந்த ... மேலும் பார்க்க

கேரள : 'மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம், ஆனால் இந்தியை..!' - உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்ப... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க