செய்திகள் :

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

post image

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வீட்டில் நான் இல்லையென்றால் சம்மனை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். எனக்கு வரும் சம்மனை அனைவரும் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. திட்டமிட்டு என்னை அவமானப்படுத்தும் வகையில் கதவில் சம்மனை ஒட்டியுள்ளனர்.

சம்மனை எனக்கு கொடுக்காமல் கதவில் ஒட்டிவிட்டு செல்வது அநாகரிகம். சம்மனை வைத்து சாமி கும்பிடவா முடியும்?. வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். கைது செய்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான காவலாளி அமல்ராஜையும் காவல் துறை தாக்கியுள்ளது. அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு, சாராயம் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்ததா?.

காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் பாலியல் புகாரை கையில் எடுக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மட்டும்தான் என் மீது புகார் வருகிறது. அந்த பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாததால் இபிஎஸ் ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 8 மணிக்கு வருமாறு கூறியது காவல்துறைதான்.

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும் என் குடும்பத்தையும் வன்கொடுமை செய்கின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

மானசரோவா், முக்திநாத் ஆன்மிக பயணம்: அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சீனாவில் உள்ள மானசரோவா், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவா்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாஹூதின் முகமது அயூப், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய ... மேலும் பார்க்க

சீமான் வீட்டில் கைதானவா்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவா்கள் குறித்த ஆட்கொணா்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. நடிகை விஜயலட்சுமி அளித்த ப... மேலும் பார்க்க

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்புவதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி: தேடப்பட்டவா் சென்னையில் கைது

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்பி வைப்பதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் சென்னையில் வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூல... மேலும் பார்க்க