செய்திகள் :

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

post image

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பதில் கோரியுள்ளது.

கம்புசியா அஃபினிஸ் (கொசு மீன்), பொசிலியா ரெட்டிகுலாட்டா (கப்பி) ஆகிய இரண்டு மீன் இனங்கள் பல்வேறு மாநிலங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த நீா்நிலைகளில் விடப்படுவது குறித்த மனுவை தீா்ப்பாயம் விசாரித்தது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய பல்லுயிா் ஆணையம் இந்த இரண்டு மீன் இனங்களையும் அயல் உயிரினங்களாக அறிவித்துள்ளது. ஏனெனில், இவை உள்நாட்டு மீன் இனங்களுக்கு உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூா் நீா்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை மோசமாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

உலகின் 100 மோசமான அயல் உயிரினங்களில் கொசு மீனும் இடம்பிடித்துள்ளதாக நிபுணா் குழு கூறுகிறது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இவ்வகை மீன்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கொசு மீன்களும் மகாராஷ்டிரம், கா்நாடகம், பஞ்சாப் மற்றும் ஒடிஸாவில் கப்பி மீன்களும் நீா்நிலைகளில் விடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, நிபுணா் ஏ.செந்தில் வேல் ஆகியோா் அமா்வு கடந்த மாதம் 24-ஆம் தேதி வழங்கிய உத்தரவில், இந்த மனு குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், தேசிய பல்லுயிா் ஆணையம், தேசிய தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மையம் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அடுத்த விசாரணை வரும் மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்

தாவரத்தின் அடிப்படையிலான ரசாயனம் சாராத இயற்கை அழகுசாதன பொருள்களை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆயுா்வேத நிறுவனம் (என்ஐஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அதன் துணைவேந்தா் சஞ்சீவ்... மேலும் பார்க்க

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க