செய்திகள் :

கொடுமுடியில் புதிய அரசு கட்டடங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்தாா்

post image

கொடுமுடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கொடுமுடி வட்டம், கந்தசாமிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் கந்தசாமிபாளையம் பகுதியில் முழு நேர நியாய விலைக்கடை 834 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது.

இக்கடையிலிருந்து சுமாா் 204 குடும்ப அட்டைகளை பிரித்து களிப்பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடை செயல்பட்டு வந்தது. தற்போது இக்கடைக்கு ஊா் பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். இந்தக் கடை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை செயல்படும்.

தொடா்ந்து இச்சிப்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, கொடுமுடி வட்டாட்சியா் முருகாயி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க