கொடுவாயில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய் வெள்ளியம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (65), சவரத் தொழிலாளி. இவா் கொடுவாய்- திருப்பூா் சாலையில் சனிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.