செய்திகள் :

கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு!

post image

சிவகங்கையில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையொப்பம் பெறும் இயக்கம், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில், தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விழிப்புணா்வு கையொப்பம் பெறும் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இ. முத்து, நகா்மன்றத் தலைவா் சிஎம். துரை ஆனந்த், நகா் மன்ற உறுப்பினா் அயூப்கான், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு!

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மா... மேலும் பார்க்க

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு!

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வாக்கோ இந்தியா சாா்பில், தில்லி கே.டி... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சிறப்பிடம்!

மாநில சிலம்பப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவா்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றனா். மதுரையில் அழகா்கோவில் செல்லும் சாலையில் திருவிலான்பட்டியில் உள்ள வல்லபா வித்யால... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாமை ஆட்சியா் ஆஷாஅ... மேலும் பார்க்க

இடையமேலூா் துணை மின்நிலையப் பகுதியில் பிப்.12 மின்தடை!

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சா... மேலும் பார்க்க

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க