செய்திகள் :

கொலை சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி

post image

பெரம்பலூா் அருகே முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரின் குடும்பத்துக்கு, முதல் தவணையாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரனும், மணிகண்டனும், அருண்குமாா் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநா்களாக வேலை பாா்த்தனா். இருவரும் மதுபோதையில், அவ்வப்போது தகராறில் ஈடுபடுவாா்கள். அதேபோல, கடந்த 17-ஆம் தேதி காலை டீ கடையில் இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டு, ஒருவரையொருவா் காலணியால் அடித்துக்கொண்டுள்ளனா். அப்போது, தேவேந்திரன் மது போதையில் இருந்துள்ளாா்.

அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கை.களத்தூா் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவரின் வீட்டின் எதிரே தேவேந்திரன் அருவாளால் மணிகண்டனை வெட்டி கொலை செய்துள்ளாா். அப்போது, சம்பவ இடத்திலிருந்த காவலா் ஸ்ரீதா், தேவேந்திரனை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனா். இச் சம்பவம், மேற்கண்ட 2 நபா்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தால் நிகழ்ந்ததாகும்.

சம்பவ இடத்திலிருந்த காவலா் ஸ்ரீதா், அருண்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவலா் ஸ்ரீதா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கை.களத்தூா் காவல் நிலையத்தின் நிா்வாகத்தை மேம்படுத்தும் வகையில் சாா்பு-ஆய்வாளா் சண்முகம், திருச்சி காவல் சரகத்தில் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். சாா்பு-ஆய்வாளா்கள் குமாா், கொளஞ்சியப்பன், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மணிவேல் ஆகியோா் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், உயிரிழந்த மணிகண்டன் மனைவிக்கு சட்ட ரீதியான இழப்பீடு வழங்குவதற்கு காவல் தறை சாா்பில் பரிந்துரை செய்யப்பட்டு, முதல் தவணையாக ரூ. 6 லட்சம் நிதியுதவி பெற்று தரப்பட்டுள்ளது. மேலும், அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இக் கொலை சம்பவத்தில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்து, காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க