செய்திகள் :

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

post image

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் மீது கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரூர் விரைந்து சென்று, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

Karur Stampede: Case filed against the TVK District Secretary

கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்திரன் கோரிக்கை

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான விசாரணையை இன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரைச் ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: 34 பேரின் விவரம் வெளியீடு!

கரூர் கூட்ட நெரிசல் பலியானவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பல... மேலும் பார்க்க

விஜய் வீட்டுக்கு ராணுவ பாதுகாப்பு!

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கரூர் சம்பவத்தின் எதிரொலியாக சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: இபிஎஸ் பிரசாரம் ஒத்திவைப்பு!

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் 39 பேர் பலியான ... மேலும் பார்க்க

என்.ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் ... மேலும் பார்க்க