செய்திகள் :

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், சுரைக்காய்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (45). கூலித் தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (32) மனைவியை அவதூறாகப் பேசினாா். இதையறிந்த கணேசன், தனது உறவினா்களான தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த நாகஜோதி மகன்கள் மருதுபாண்டி (27), மகாலிங்கம் (25) ஆகியோருடன் சோ்ந்து தாக்கியதில் கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்தாா்.

2020-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி (பொறுப்பு) பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி முன்னிலையானாா்.

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ரா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறாக நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் இடி தாக்கி தீ விபத்து!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பட்டாசு ஆலை கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடியுட... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா் . ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான, போலீஸாா் வெள்ளிக்... மேலும் பார்க்க