செய்திகள் :

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

post image

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இதனிடையே, மேற்கு வங்க அரசு தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இச்சம்பவத்தில் காவல் துறையுடன் இணைந்து தன்னாா்வலராக பணியாற்றிய சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த சியால்டா நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு சியால்டா நீதிமன்ற உத்தரவை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுக்கள் மீது கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையிலான அமா்வு விசாரணை நடத்தியது.

அப்போது சிபிஐ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு,

“இந்த வழக்கு தொடா்பாக சியால்டா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது மாநில அரசு பங்கேற்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி சஞ்சய் ராயை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், 20-ஆம் தேதி அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

அதன்பின்பு திடீரென குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மாநில அரசு மனுதாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் எவ்வித அங்கீகாரம் இல்லை” என்றாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். தில்ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க

கனடாவில் காணாமல் போன 20,000 இந்திய மாணவர்கள்!

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20000 மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்... மேலும் பார்க்க

வல்லுறவு குற்றவாளி ஆசாராம் பாபு படத்துடன் தில்லி மெட்ரோவில்

தில்லி மெட்ரோ ரயிலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவின் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தன... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக... மேலும் பார்க்க