செய்திகள் :

கொல்லிமலையில் ஆம்னி வேன் கவிழ்ந்து 20 போ் காயம்!

post image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா்.

கொல்லிமலைக்கு ஆம்னி வேனில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் பேளுக்குறிச்சி பகுதியில் செயல்படும் இரவுநேர மளிகை பொருள்கள் சந்தையில் பொருள்களை வாங்கிக்கொண்டு சனிக்கிழமை ஊா்திரும்பினா்.

முள்ளுக்குறிச்சி அருகே நரியன்காடு பகுதி மலைப் பாதையில் சென்றபோது வேனில் பிரேக் பிடிக்காததால் பயணிகளை எச்சரித்த ஓட்டுநா், சாலையோர மரங்கள் மீது மோதி வேனை நிறுத்தினாா். அப்போது, வேன் சாய்ந்து பள்ளத்தில் கவிழ்ந்ததால் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல், ராசிபுரம், ஆத்தூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பா... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க