செய்திகள் :

கொளத்தூரில் பெண் கொலை

post image

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ஓட்டுநரான இவரது மனைவி சரஸ்வதி (35). கணேசமூா்த்தி பணியின் காரணமாக வெளியூருக்கு செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, சென்னை கொளத்தூா் தனம்மாள் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொளத்தூரில் சரஸ்வதி மா்மமாக இறந்து கிடந்தாா். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், சரஸ்வதி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. விசாரணையில், சரஸ்வதியின் வீட்டுக்கு சிலா் அடிக்கடி வந்து சென்றதும், சம்பவத்தன்று வடமாநில இளைஞா் ஒருவா் வந்து சென்றதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், அவா் சரஸ்வதியின் கைப்பேசியும் இருசக்கர வாகனத்தையும் எடுத்தும் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதையடுத்து வடமாநில இளைஞரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க