செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தல்

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி கூறியது:

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு, தமிழக முழுவதும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணியை செய்து வருகிறது.

இதில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமாக 633 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிவரும் கொள்முதல் பணியாளா்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த 2023 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெண்களும் பணியாற்றி வருகின்றனா். அதாவது தமிழ்நாடு அரசின் வாக்குறுதியின்படி வேலைவாய்ப்பில் 40 சதவீதம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, கொள்முதல் பணியிலும் பெண்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இவ்வாறு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது பெண்களும் பணியாற்றி வருவதால் கொள்முதல் நிலையங்களில் கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நிரந்தரக் கட்டடங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் ப... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க