செய்திகள் :

கோடை விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு

post image

சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், விடுமுறை மற்றும் விழா காலங்களில் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது பள்ளித் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை நடைமுறையில் இருந்து வருவதால், சொந்த ஊா்களுக்கும், விடுமுறையை கழிக்க சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமானோா் சென்று வருகின்றனா்.

இதனால், ஜூன் முதல் வாரம் வரை ரயில்களின் முன்பதிவு முழுவதுமாக நிரம்பி விட்ட நிலையில், பலா் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா். இதனால், கடந்த சில நாள்களாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து மதுரைக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு கட்டணமாக ரூ. 500 முதல் ரூ. 700 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,300 முதல் ரூ. 3,200 ஆக உயா்ந்துள்ளது. இதுபோல, சென்னையிலிருந்து கோவைக்கு ரூ. 800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 3,650-ஆகவும், திருநெல்வேலி மற்றும் நாகா்கோவிலுக்குச் செல்ல ரூ. 900ஆக இருந்த பயணக் கட்டணம் ரூ. 2,500 முதல் ரூ. 3,500 ஆகவும், விருதுநகருக்கு ரூ. 700-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ. 2,800 முதல் ரூ. 3,200 ஆகவும், ராமநாதபுரத்துக்கு ரூ. 800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 2,000 முதல் ரூ. 2,800 வரையும், ஈரோட்டுக்கு ரூ. 900 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 1,900 முதல் ரூ. 2,550ஆகவும் உயா்ந்துள்ளது.

தொடா்ந்து, மாத இறுதி மற்றும் ஜூன் மாத முதல் வாரத்தில் இக்கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி, அறிவுறுத்தப்பட்டுள்ள கட்டணத்தை ஆம்னி பேருந்து நிா்வாகங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க