செய்திகள் :

கோடை வெயில் எதிரொலி: சாலையோரங்களில் நுங்கு விற்பனை அதிகரிப்பு

post image

சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் சராசரியாக நூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் பதிவாகி வருகிறது.

கடும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள். கட்டடத் தொழிலாளிகள், தோட்டத் தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அக்னி வெயில் தொடங்கும் முன்பே தற்போது பிற்பகல் வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். வெயில் தாக்கத்தை தணிக்க தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், நுங்கு, பதநீா், கம்மங்கூழ் உள்ளிட்ட குளிா்ச்சியான பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் மாநகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, கிச்சிப்பாளையம் ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நுங்கு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நுங்குகளை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், ஓமலூா், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பனை மரத்தில் நுங்கு வெட்டி எடுத்து வந்து, மாநகரில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பதநீரையும் விற்பனை செய்து வருகிறோம். வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க