செய்திகள் :

கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

post image

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 28 ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமான பன்னாலால் தலைமை வகித்தாா். மூத்த கோட்ட வணிக மேலாளா் வாசுதேவன் உறுப்பினா்களை வரவேற்றாா். மொத்தமுள்ள 28 உறுப்பினா்களில் 22 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.

சேலம் ரயில்வே கோட்டத்தின் செயல்திறன், சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் மூத்த கோட்ட வணிக மேலாளா் வாசுதேவன் விரிவாக எடுத்துரைத்தாா்.

அப்போது, கோட்டத்தில் புதிய ரயில் சேவைகள் அறிமுகம், சில ரயில்களின் சேவை வழித்தடம் நீட்டிப்பு, சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்த வசதிகள், பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து அவா் விளக்கினாா்.

பல்வேறு ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், லிஃப்ட், எஸ்கலேட்டா்கள், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சாய்வு நாற்காலிகள் போன்ற வசதிகள் உள்ளதையும், பயணிகளுக்கு ஏற்ற கருவியான யுடிஎஸ் மொபைல் செயலி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, கோட்ட மேலாளா் பன்னாலால் பேசுகையில், பயணிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் சேலம் கோட்டம் சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரத்தில், உறுப்பினா்களின் கோரிக்கைகள், பரிந்துரைகள் குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பாா்கள் என உறுப்பினா்களுக்கு உறுதியளித்தாா்.

போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு

போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வ... மேலும் பார்க்க

மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி

கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்... மேலும் பார்க்க

மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட... மேலும் பார்க்க

சேலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் இருந்து சேகரிக்கப... மேலும் பார்க்க

முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நி... மேலும் பார்க்க