செய்திகள் :

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள்: 23 ஆண்டுகளுக்குப் பின்னா் தீா்ப்பு

post image

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு மதக் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறுபான்மையினா்.

அப்போது சிறாா்களாக இருந்த 6 போ் மீது ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறாா்களாக இருந்த 6 பேரில் மூவரை குற்றவாளிகள் என்றும், இருவரை விடுதலை செய்தும் மாநிலத்தில் உள்ள பஞ்ச்மகால் மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்தபோது 6 பேரில் ஒருவா் உயிரிழந்தாா். குற்றவாளிகளாக தீா்ப்பளிக்கப்பட்ட மூவரை 3 ஆண்டுகளுக்கு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கவும், அவா்களுக்குத் தலா ரூ.10,000 அபராதம் விதித்தும் அந்த வாரியம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, மூவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை 30 நாள்களுக்கு அந்த வாரியம் நிறுத்திவைத்தது என்று அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சல்மான் சா்கா தெரிவித்தாா்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க