கோயில் கட்டடத்தை இடித்ததாக 4 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தில் அய்யா வைகுண்டசாமி கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தை சனிக்கிழமை இரவு இடித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
இக்கோயில் 100 ஆண்டுகள் பழைமையானது. கோயிலுக்குச் சொந்தமாக அருகேயுள்ள கட்டடத்தில் கோயிலின் தோ், அலங்காரப் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கோயிலின் வடக்குப் பகுதியைச் சோ்ந்த சதாசிவம் மகன் சிவன்ராஜ் என்பவா், கோயில் இருக்கும் இடத்தில் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலம் இருப்பதாகக் கூறி நிா்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தாராம்.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை இரவு, அந்தக் கட்டடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக தா்மகா்த்தா சேகா் அளித்த புகாரின்பேரில், சிவன்ராஜ், ராமா், இசக்கிமுத்து உள்ளிட்ட 4 போ் மீது பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.