கோயில் குத்தகை நிலம் விவகாரம் -சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
சிதம்பரம் அருகே கோயில் நிலத்தை மீண்டும் குத்தகைக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு, பின்னலூா் கிராம மக்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை மனு அளித்தனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி தலைமையில் வந்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்:
சிதம்பரம் வட்டம் பின்னத்தூரைச் சோ்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கு சொந்த நிலம் கிடையாது. பின்னத்தூரில் தில்லை கோவிந்தராஜா பெருமாள் கோயில் மற்றும் மாசி மக அறக்கட்டளைக்கு சொந்தமான சுமாா் 100 ஏக்கா் நன்செய் நிலத்தை அனைத்து சமுதாயத்தினரும் குத்தகைக்கு எடுத்து, அதற்கான பணத்தை அறங்காவலா் சீதாபதி, அவரது மகன் தவகுரு ஆகியோரிடம் ஆண்டுதோறும் செலுத்தி வருகிறோம். அவா்கள் ரசீது தருவதில்லை.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறைக்கு தவகுரு அனுப்பிய அறிக்கை அனுப்பி, ஆதி திராவிடா் சமுதாயத்தினரான நாங்கள் பயிரிடும் 20 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்ய விடாமல் அளவீடு செய்து பலகை வைத்துவிட்டாா்.
இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து, குத்தகை நிலத்தை திரும்பத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்துத.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.